தேயிலைத் தோட்டங்களுக்கு வழங்கப்படும் உர மானியம் அதிகரிக்கப்படும் என தகவல்!

தேயிலைத் தோட்டங்களுக்கு தற்போது வழங்கப்படும் உர மானியத்தை அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கம், இலங்கைத் தேயிலைச் சபையின் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை 10 ஏக்கருக்கு மாத்திரமே இந்த உர மானியம் வழங்கப்பட்டு வந்தநிலையில், எதிர்வரும் காலங்களில் அதனை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

அதனடிப்படையில், இந்த உர மானியத்தை 10 ஏக்கரில் இருந்து 50 ஏக்கர் வரை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply