தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளையும் (மே 21) மூடப்படும் என வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற் கொண்டு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள பல பாடசாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
