
கண்டி எசல பெரஹரா உற்சவத்தின் இறுதி பவனி இன்று இடம்பெறுகிறதுஇன்று நடைபெறும் பெரஹரா உற்சவத்தில் இறுதி ரந்தோலி பெரஹரா இடம்பெறவுள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
வரலாற்று சிறப்பு மிக்க பெரஹரா உற்சவத்தினை காண்பதற்காக மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பெரஹரா உற்சவத்தினை காண்பதற்கு நாட்டின் ஏனைய பாகங்களிலும் உள்ள மக்கள் கண்டிக்கு வருகை தருகின்றமை வழக்கம்.
ஆனால் இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்களின் எண்ணிக்கை கடந்த வருடங்களை காட்டிலும் மிகவும் குறைவாக உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.