நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில பாடசாலைகளுக்கு விடுமுறை!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளை இன்று (4) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (4) மற்றும் நாளை (5) இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (4) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஹோமாகம, கம்பஹா மற்றும் களனி ஆகிய கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் கடுவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளுக்கும் இன்று (4) பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலவும் காலநிலையை கருத்தில் கொண்டு, தற்போதுள்ள சூழ்நிலையின் அடிப்படையில் முடிவெடுக்கும் அதிகாரம் மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கே உள்ளது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply