இரண்டாவது மின் கட்டண திருத்தத்திற்கான திகதி அறிவிப்பு!

2024ஆம் ஆண்டின்  இரண்டாவது மின் கட்டண திருத்தம் ஜூலை 15 ஆம் திகதி அறிவிக்கப்படும் என  பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ இன்று (18) தெரிவித்துள்ளார்.

இதன்படி, உத்தேச மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் எழுத்துமூலமான கருத்துக்கள் ஜூலை 8ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் வாய்மூலமான கருத்துக்கள் ஜூலை 9ஆம் திகதி நடைபெறும் எனவும் அவர் மேலும்   குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை மேற்கொள்ளப்படவுள்ள கட்டண திருத்தத்தில் மின் கட்டணம் குறைக்கப்படவுள்ளதுடன்,  குறைக்கப்பட்ட கட்டணத்தின் சதவீதங்கள் ஜூலை 15ம் திகதி அறிவிக்கப்படும்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply