சுமார் 400 மில்லியன் ரூபா பெருமதியான 4 கிலோகிராம் எடையுள்ள ஐஸ் போதைப்பொருளுடன் கூடிய பொதி ஒன்று கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த பொதி பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
