பரிஸ் கிளப் மற்றும் ஏனைய பங்குதாரர்களுடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான உடன்படிக்கைகள் நாளையதினம் கைச்சாத்திடப்படும் என இன்று (25) நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் குணவர்தன தெரிவித்தார்.
