பதில் சட்டமா அதிபராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பரிந்த ரணசிங்க நியமனம்!

பதில் சட்டமா அதிபராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பரிந்த ரணசிங்க பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

சட்டமா அதிபராக கடமையாற்றிய சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலம் கடந்த 26 ஆம் திகதி முடிவடைந்த நிலையில், சட்டமா அதிபர் பதவி வெற்றிடமாகவே இருந்தது.

இதன்படி, பதில் சட்டமா அதிபராக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்கவை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அவரை சட்டமா அதிபர் பதவிக்கு நியமிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரை எதிர்வரும் காலங்களில் சட்ட சபைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும், இந்த முன்மொழிவுக்கு அரசியலமைப்பு சபையின் ஒப்புதல் தேவை, அது இரண்டு முறை தோற்கடிக்கப்பட்டது.

இதன்படி, முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஏ.பரிந்த ரணசிங்கவின் மகனான சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பரிந்த ரணசிங்க, பதில் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply