நாடளாவிய ரீதியில் நாளை (9) அரச பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சு இன்று (8) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் நாளை சுகயீன விடுமுறை என அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
