வாக்குப் பெட்டிகளைக் கொள்ளையிட முயற்சி செய்தால் சூடு

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குச் சாவடியில் வாக்குப் பெட்டிகளைக் கொள்ளையிட முயற்சி செய்தால் அல்லது குழப்பத்தை விளைவிக்க முயற்சித்தால் துப்பாக்கிச்சூடு நடத்த பொலிஸாருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன இதனைத் கூறினார். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஆயுதமேந்திய தலா இரு பொலிஸ் உத்தி யோகத்தர்கள் கடமையில் இன்று ஈடுபடுத்தப்பட்டிருப்பார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir