வவுனியா- ஈரற்பெரியகுளம் வாக்களிப்பு நிலையம் மாற்றம்

வவுனியா- ஈரற்பெரியகுளம் பரகும் மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

ஈரற்பெரியகுளம் பரகும் மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தில் குளவிக்கூடு அமைந்துள்ளமையால் பாதுகாப்பு கருதி இரட்டை கலாசார மண்டபத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியாவிலுள்ள மக்களும் ஆர்வமாக வாக்களிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மற்றும் சுகாதார அதிகாரிகளினால் முன்மொழியப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை மக்கள் அனைவரும் பின்பற்றுவதனை அவதானிக்க கூடியதாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir