வீரமுனைப் படுகொலையின் 34 ஆவது வருட நினைவேந்தல்

1990 இல்  இடம்பெற்ற வீரமுனைப் படுகொலையின் 34 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு வீரமுனை சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயமுன்றலில் மிகவும் உணர்வு பூர்வமாக நேற்று (12) திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.

சம்மாந்துறை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் பூ.பரமதயாளன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சோ.புஸ்பராஜா, காரைதீவு முன்னாள் பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில் உள்ளிட்ட ஆலய உறுப்பினர்கள் பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த மிலேச்சத்தனமான படுகொலை 1990 ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி  வீரமுனை ஆலயத்தினுள் வைத்து இடம்பெற்றிருந்தது. (04)

You May Also Like

About the Author: digital

Leave a Reply