இளைஞர் ஒருவர் சுட்டுப் படுகொலை; திருமலையில் அதிகாலை பயங்கரம்

திருகோணமலை, ஸ்ரீபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்மம்பில கிராமத்தில் பிள்ளையார் கோயில் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் ஸ்ரீபுர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வயல் காவலில் ஈடுபட்டிருந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் அவர் மீது மூன்று தடவைகள் ரி – 56 ரக துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

மேற்படி நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று ஸ்ரீபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணையை ஸ்ரீபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் டுபாயில் இருக்கும் போதைப்பொருள் கும்பல் தொடர்புபட்டிருக்கலாம் என்று ஸ்ரீபுர பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply