தபால் மூலம் வாக்களிக்கத் தவறியோருக்கு இன்றும் நாளையும் வாய்ப்பு

ஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பைத் தவறவிட்டவர்கள்  இன்றும் (11) நாளையும் (12) வாக்களிக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் தினத்தன்று வாக்களிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு கடந்த 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனைத் தவறவிட்டோர் இந்த 2 தினங்களில் தபால் மூல வாக்குகளைப் அடையாளப்படுத்தாவிட்டால், ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் செப்டம்பர் 21ஆம் திகதியோ அல்லது வேறு எந்த நாளிலோ வாக்குகளை அளிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றும் நாளையும் தபால் மூல வாக்களிப்பைப் பயன்படுத்தும் வாக்காளர்கள் தமது பணியிடங்கள் அமைந்துள்ள மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகம் அல்லது பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு சென்று வாக்களிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

You May Also Like

About the Author: digital

Leave a Reply