பெருந்தொகை ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

கிராண்ட்பாஸ் – நவகம்புர பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் ​போதே குறித்த சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைதான சந்தேகநபரிடமிருந்து 17.890 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொழும்பு 14 பகுதியைச்சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply