தோ்தலைப் புறக்கணிக்கக் கோருவது சட்டவிரோதமான செயல் அல்ல!

கஜேந்திரன் நீதிமன்றத்தால் விடுதலை

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பு செய்யுமாறு கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பரப்புரையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இவ்வாறு பரப்புரையில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட சிலரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றத்தால் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

அந்தவகையில் அவர்கள் இன்றையதினம் நீதிமன்றின் ஆஜராகினர். அவர்களது சட்டத்தரணிகள், ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பதும் புறக்கணிக்கக் கோருவதும் சட்ட விரோதம் ஆகாது என்று நீதிமன்றில் வாதிட்டனர். அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

அதன்பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனும் ஏனைய சந்தேகநபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply