ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று வழக்கமான அட்டவணைப்படி ரயில்கள் இயங்கும்!

ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று (செப். 21) சனிக்கிழமைகளுக்கான வழக்கமான ரயில் நேர அட்டவணை அமுல்படுத்தப்படும் என ரயில்வே பிரதிப் பொது முகாமையாளர் நந்தன இடிபோலகே தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (22) நீண்ட தூர புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளதாகவும் குறுகிய தூர புகையிரத பயணங்களில் குறிப்பிட்ட அளவு குறைவடையலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்காக கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் விசேட புகையிரதத்தை இயக்குவதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply