வெளி வணிக கடன் வழங்குநர்களுடன் இலங்கை ஒப்பந்தங்களை எட்டியுள்ளது!

17.5 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்க இலங்கை அதன் வணிகக் கடன் வழங்குநர்களுடன் உடன்பாட்டை எட்டியுள்ளதுடன் அதனூடாக தற்போதைய நிகர கடன் பெறுமதியில் 40.3 வீதத்திற்கு  நிவாரணம் கிடைக்கவுள்ளமையும் சிறப்பம்சமாகும்.

குறித்த உடன்பாட்டின் ஊடாக குறிப்பிடத்தக்க கடன் நிவாரணம் கிடைக்க இருப்பதோடு கடன் வட்டி செலுத்தும் தொகை குறைவடைவதன்  மூலம் நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த  வாய்ப்பு ஏற்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 3.3 பில்லியன் டொலர் கடன் மறுசீரமைப்புக்காக  சீன அபிவிருத்தி வங்கியுடன் இலங்கை உடன்பாட்டை எட்டியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சீனா எக்ஸிம் வங்கி, சீனா அபிவிருத்தி வங்கி, உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு மற்றும் பிணைமுறி உரிமையாளர்களுடன்  செய்து கொள்ளப்பட்ட கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளின் விளைவாக, சர்வதேச நாணய நிதியத்துடனான திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 17 பில்லியன் டொலர்களை விட அதிக தொகை கடன் நிவாரணம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply