வாக்குச் சீட்டைக் கிழித்த யாழ். இளைஞர் கைது!

யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியசாலையில் வாக்களிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் வாக்குச் சீட்டைச் சேதப்படுத்தியமை தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று இடம்பெற்றுவரும் நிலையில், வாக்கெடுப்பு உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்ட வாக்குச் சீட்டையே குறித்த இளைஞர் இரண்டாகக் கிழித்துள்ளார்.

தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்களின் முறைப்பாட்டுக்கமைய குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞரிடம் யாழ்ப்பாணம் தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த இளைஞர் தேர்தலில் வாக்களிப்பது இதுவே முதல் தடவை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

You May Also Like

About the Author: digital

Leave a Reply