வவுனியா மாவட்டத்தில் 72 வீத வாக்களிப்புப் பதிவு

வன்னி தேர்தல் தொகுதியில் எவ்விதமான வன்முறைச் சம்பவங்களும் இன்றி சுமூகமான முறையில் தேர்தல் வாக்களிப்பு முடிவு பெற்றுள்ளது.

வாக்காளர்களுக்கும் கடமையில் ஈடுபட்டிருந்த அரச உத்தியோகத்தர்கள், பொலிஸார் உட்பட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் 72 வீதம் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது. வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் நிலையத்திற்கு பொலிஸாரின் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதேவேளை இன்னும் சில நேரங்களில் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்காக சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று நள்ளிரவு அளவில் வன்னித் தேர்தல் தொகுதியின் இறுதி முடிவுகளை அறிவிப்பதற்கு நாங்கள் முயற்சியை மேற்கொள்வோம், எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply