தேவை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம்!

தேவை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் வன்முறை வெடித்தால் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

“ஜனாதிபதித் தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகின்றது. இந்தச் சூழலைப் பேணுமாறு பொதுமக்களிடமும் அரசியல் கட்சித் தலைவர்களிடமும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

ஜனாதிபதித் தேர்தலின்போது தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம்” என்றும் அமைச்சர் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply