50 வீதப் பெரும்பான்மை யாருக்கும் இல்லை? விருப்பு வாக்குகள் எண்ணப்படும்!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இறுதி முடிவுகள் இன்று மாலைக்குள் வழங்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

50 சதவீத வாக்குகளையும் மேலதிகமாக ஒரு வாக்கினையும் பெற்ற வேட்பாளர் வெற்றிபெற்றவராவார். அந்த சதவீத வாக்குகளைப் பெறவில்லை என்றால், விருப்பு வாக்குகளை எண்ண வேண்டிய தேவை ஏற்படும் என அவர் குறிப்பிட்டார்.

விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு அதிகாரிகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 5,200 ஐத் தாண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி யார் என்பது தொடர்பாக நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply