இலஞ்சம் பெற்ற மோட்டார் போக்குவரத்து திணைக்கள உயர் அதிகாரிக்கு விளக்கமறியல்!

மூன்று பேருந்துகளின் பூரண உரிமையை உரிமையாளருக்கு மாற்றுவதற்காக 2 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி அலுவலக பிரதி ஆணையாளர் உட்பட மூவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் சமர்ப்பித்த அறிக்கையில், இரண்டு தடவைகளில் இரண்டு இலட்சம் ரூபா இலஞ்சத் தொகை பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளது.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதவான், குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply