பிரேமலால் ஜெயசேகர பதவியேற்க தடைகள் எதுவும் இல்லை!

இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜெயசேகர பதவியேற்பதில் சட்டரீதியாகப் பிரச்சினை இருக்காது என பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக தெரிவித்தார்.

பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் களின் பெயர்கள் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்டது.

குறித்த அறிவிப்பில் பிரேமலால் ஜெயசேகரவின் பெயர் சேர்க்கப்படாததால் அதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என பாராளுமன்ற பொதுச்செயலாளர் தெரிவித்தார்.

பிரேமலால் ஜெயசேகர தாக்கல் செய்த மேல்முறையீடு குறித்து அவரது சட்டத்தரணி பாராளுமன்றத்திற்குத் தெரிவித்தால், அவர் அமைச்சராகப் பதவியேற்க வாய்ப்பு கிடைக்கும் என பாராளுமன்ற பொதுச்செயலாளர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir