மஹிந்த தேசப்பிரிய இன்றைய தினம் விசேட சந்திப்பு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் அரசியல் கட்கிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்றைய தினம் விசேட சந்திப்பு ஒன்றை நடாத்த உள்ளார்.
ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழுவில் இந்த சந்திப்பு இன்றைய தினம் முற்பகல் 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு ஒரு அரசியல் கட்சியில் ஒரு பிரதிநிதியை மட்டும் இந்தக் கூட்டத்தில் இணைத்துக் கொள்ள தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலை நடாத்துவது குறித்து இந்த சந்திப்பில் விசேடமாக கலந்துரையாடப்பட உள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir