சூதாட்டத்தில் ஈடுபட்ட நகரசபை தவிசாளர் உட்பட்ட 7 பேருக்கும் விளக்கமறியல்

ஊரடங்கின்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட நகரசபை தவிசாளர் உட்பட்ட 7 பேருக்கும் விளக்கமறியல்

ஊரடங்கின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட நாவலப்பிட்டிய நகரசபை தவிசாளர் உட்பட்ட 7 பேரையும் மே 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நேற்று இவர்கள் மன்றில் முன்னிலையாக்கப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படடது.

இவர்களுக்கு பிணை கோரப்பட்டபோதும் தனிமைப்படுத்தல் சட்டத்தின்கீழ் இது சாதாரணகுற்றம் அல்ல என்றுக்கூறி நீதிவான் பிணைக்கோரிக்கையை நிராகரித்தார்.

இவர்கள் நேற்று முன்தினம் கினிகத்தேன நகரில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

You May Also Like

About the Author: kalaikkathir