ரணில், சம்பந்தன், சுமந்திரன் உட்பட 12 பேர் விசாரணைக்கு அழைப்பு !

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இரா. சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன், அனுரகுமார திஸாநாயக்க மற்றும் 5 முன்னாள் அமைச்சர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணைகளை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன அழைப்பாணை விடுத்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை தவிர, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா, ரவூப் ஹக்கீம், மலிக் சமரவிக்ரம ஆகியோருக்கே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜயம்பதி விக்ரமரத்ன, ஜே.சீ. வெலியமுன ஆகியோருக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார விவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் நிஹால் ஜயதிலக்க ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இவர்களுக்கு இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir