ஸ்ரீலங்கன் எயர்லைன்சிற்கு சீனா ஒரு மாதகால தடை!

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட பல பயணிகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் கொழும்பு சங்காய் சேவைக்கு சீனா தற்காலிக தடை விதித்துள்ளது.

ஓகஸ்ட் ஏழாம் திகதி ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் யுஎல்866 விமானத்தில் பயணித்தவர்களில் 22 பேர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு;ள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே சீனா இந்த தடையை அறிவித்துள்ளது.

ஒரு மாதகாலத்துக்கு இந்த தடை நீடிக்கும் என சீனா அறிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir