ஆசனத்தை கோருவதற்குக் அத்துரலியே ரதன தேரருக்கு எந்த வாய்ப்பும் இல்லை

எங்கள் சக்தி மக்கள் கட்சியின் கிடைத்துள்ள தேசிய பட்டியல் ஆசனத்தை கோருவதற்குக் கட்சியின் தலைவர் அத்துரலியே ரதன தேரருக்கு எந்த வாய்ப்பும் இல்லை என மாகல்கந்தே சுதத்த தேரர் தெரிவித்துள்ளார்.

கம்பாஹா மாவட்ட மக்கள் ரதன தேரரைப் பாராளுமன்றத்திற்கு அனுப்ப வாக்குகளை வழங்குவார்கள், ஆனால், இம்முறை தேர்தலின் போது இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த முறை தேசிய பட்டியில் உறுப்பினர் பதவிக்கு ஞானசார தேரரைப் பரிந்துரைக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

ரதன தேரர் கடந்த 15 ஆண்டுகளாக பாராளுமன்ற உறுப் பினராக இருந்தபோதிலும், சிங்களவர்களுக்காகவோ அல்லது பௌத்தர்களுக்காகவோ அவர் எதுவும் செய்ய வில்லை என மாகல்கந்தே சுதத்த தேரர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir