2 ஆயிரத்து 890 ஆக உயர்வடைந்துள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 890 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்று மாத்திரம் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய இரண்டு பேருக்கும், மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் மற்றும் துருக்கியில் இருந்து நாட்டிற்கு வந்த வெளிநாட்டவர் ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேநேரம் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த 8 பேர் நேற்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதனையடுத்து, இந்த தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 666 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 211 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அத்தோடு கொரோனா தொற்று சந்தேகத்தில் 55 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதோடு, இந்த வைரஸ் தொற்றினால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir