அரச வேலை வாய்ப்புத் திட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் முற்றாகப் புறக்கணிப்பு

நாடு முழுவதிலும் ஒரு லட்சம் பேருக்கு அரச வேலை வாய்ப்பை வழங்கும் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இப்போதைக்குக் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்ற அரசின் தீர்மானத்தை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு நேற்று மாலை அவசர உத்தரவாகத் திடீரென வெளியிட்டுள்ளது.

க.பொ.த. சாதாரணம் வரை கல்வி கற்றவர்களில் இருந்து நாடு முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கவுள்ளதாக அறிவித்த அரசு தற்போது வடக்கு, கிழக்கில் மட்டும் அதனை நிறுத்த உத்தரவிட்ட அதேநேரம், ஏனைய ஏழு மாகாணங்களிலும் அதனை வழங்க அனுமதி வழங்கியுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir