சுகாதார பிரிவு ஊழியர்களுக்கு சீருடை

ஓட்டமாவடி பிரதேச சபையின் சுகாதார பிரிவு ஊழியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வும், சிநேகபூர்வ சந்திப்பும் பிரதேச சபையில் இடம்பெற்றது.

இதில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், முன்னாள் தவிசாளர் ஐ.டி.அஸ்மி, பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.அக்பர், மேற்பார்வை உத்தியோகத்தர்களான எம்.ஜே.அல்பத்தாஹ், எஸ்.எம்.அக்பர் மற்றும் சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஓட்டமாவடி பிரதேச சபையின் சுகாதார பிரிவு ஊழியர்களுக்கான சீருடைகளை தவிசாளர் ஏ.எம்.நௌபர், முன்னாள் தவிசாளர் ஐ.டி.அஸ்மி ஆகியோர் வழங்கி வைத்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir