கிளிநொச்சியில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் கடந்வாரம் காணாமல் போன பாடசாலை மாணவன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
தர்மக்கேணி அ.த.க.பாடசாலையில் கல்வி கற்றுவந்த பளை முள்ளியடியை சேர்ந்த  ஆர். அனோஜன் என்ற  மாணவன்  கடந்த 28 ஆம் திகத  பளை பொலீஸ் நிலையத்தில்  காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று பளை பொலீஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து தேடுதல் மேற்கொண்ட  பொலீஸார்
பளை புளோப்பளை காற்றாலை மின் உற்பத்தி பகுதியில் அமைந்துள்ள கடல் நீரேரியில் சடலமாக அடையாளம் கண்டுள்ளனர். கொலையா தற்கொலையா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir