பொருத்தமற்ற ஆடையுடன் பாராளுமன்றம் வந்த அதாவுல்லா

அரசாங்கத் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா இன்று பாராளுமன்றத்துக்கு அணிந்துவந்த ஆடை அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பாராளுளுமன்றத்துக்கு எம்.பி.கள் அணிந்து வரவேண்டிய ஆடைகள் குறித்த நிலையியற் கட்டளையை மீறும் வகையில் அவரது ஆடை இருப்பதாகத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், அதனால் அதாவுல்லா பாராளுமன்றத்திலிருந்து வெளியேறறப்பட வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

பாராளுமன்றத்திலிருந்து அவரை வெளியேற்றுவதற்கு பாராளுமன்ற சேவகர்கள் முயன்ற போது, அதனை முதலில் மறுத்த அதாவுல்லா, இறுதியாக அங்கிருந்து வெளியேறினார்.

You May Also Like

About the Author: kalaikkathir