கொழும்பு வீதி ஒழுங்கு சட்டத்தில் இன்று மாற்றம்

கொழும்பில் கடந்த வாரம் முதல் அமுலாகியுள்ள வீதி ஒழுங்கு சட்டத்தில் இன்று புதன்கிழமையிலிருந்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

இதன்படி பிரதான வீதிகளில் இடப்பக்க முதலாவது ஒழுங்கையில் பயணிகள் பஸ்கள், பாடசாலை பஸ்கள், அலுவலகப் பணியாளர் பஸ்கள் ஆகிய வாகனங்கள் மட்டுமே பயணிக்க முடியும்.

அத்துடன் ஓட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்கள் இரண்டாவது ஒழுங்கையில் பயணிக்க முடியும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir