பாடசாலை வாகனம் விபத்து – தெய்வாதீனமாக உயிர் தப்பிய 17 மாணவர்கள்

கட்டுநாயக்க பிரதேசத்தில் பாடசாலை சிற்றூர்தி ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

எவ்வாறாயினும் சம்பவத்தில் எந்தவொரு உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

நேற்று காலை கட்டுநாயக்க சரத் மாவத்தையில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவை வீதியில் கொழும்பு-சிலாபம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

எவ்வாறியினும் சிற்றூர்தியில் பயணித்த 17 மாணவர்கள் மற்றும் அதன் சாரதி ஆகியோர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir