தேன் என்று ஏமாற்றி விற்கப்பட்ட போலி தேன் அழிப்பு

மடு தேவாலயத்திற்கு செல்லும் பாதை எங்கும் தேன் என ஏமாற்றி விற்கப்பட்ட போலி தேன் போத்தல்கள் இன்று அழிக்கப்பட்டது.

கிடைக்கப்பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் 5 குழுக்களாக பிரிந்து விற்பனையில் ஈடுபட்ட இவர்கள் மெனிக்பாம், வவுனியாவை சேர்ந்தவர்கள் எனவும் கோதுமை மா, சிற்றிக் அசிட், சீனி மற்றும் தேன் இந்த நான்கையும் கலந்து குறித்த பதத்தில் காய்ச்சி இவ்வாறு போத்தல்களில் அடைக்கப்பட்டது என்பதை ஒப்புக்கொண்டதன் பின்னர் இவர்களது வயதினை மனதிற் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் வழக்கு தொடராமல் அனைத்து போலித் தேனும் அழிக்கப்பட்டது.

You May Also Like

About the Author: kalaikkathir