கிளிநொச்சியில் புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி

யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குளிரூட்டப்பட்ட கடுகதி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான நபரின் சடலம் அடையாளம் காண முடியாத அளவு உருக்குலைந்த நிலையில் காணப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir