வடக்கில் மட்டும் ஏன் பாஸ் நடைமுறை கூட்டமைப்பு பிரதமரிடம் கேள்வி

நாடாளுமன்ற முன்னான் உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது, இலங்கையின் வேறு எந்த மாகாணங்களிலும் இல்லாத பாஸ் நடைமுறை வடக்கில் நடைமுறைப்படுத்துவது ஏன்? என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அத்துடன் வடக்கில் பாஸ் நடைமுறையினால் மக்கள், வர்த்தகர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதனையடுத்து நேற்று மாலை நடைபெற்ற தமிழ்தேசிய கூட்டமைப்பினருடனான சந்திப்பிலும் அதே விடயம் ஆராயப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அதற்கு பதிலளித்த பிரதமர் மகிந்த ராஜபக்ச மே மாதம் 11ம் திகதிக்கு பின்னர் பாஸ் நடைமுறைக்கான தேவையோ, மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து நெருக்கடிகளோ இருக்காது என கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir