சிறைச்சாலை கைதிகளிடம் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க தீர்மானம்!

சிறைச்சாலையில் உள்ள கைதிகளிடம் பி.சி.ஆர். சோதனைகளை எடுப்பதறக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே இதற்கான உத்தரவினை சிறைச்சாலை ஆணைாயளர் ஜெனரலுக்கு வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் பரவாமல் தடுக்கவும், கைதிகள் மத்தியில் வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பி.சி.ஆர் சோதனைகளை நடத்துவதற்கு விரைவில் கைதிகளிடமிருந்து மாதிரிகள் பெறப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir