நல்லூர் முருகன் ஆலயத்தில் விமர்சையாக நடைபெற்ற மானம்பூ

விஜயதசமி நாளான இன்றைய தினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ஆலயத்தில் மானம்பூ உற்சவம் விமர்சையாக இடம்பெற்றது.

காலை 6.45 மணிக்கு வசந்த மண்டப பூசை இடம்பெற்று முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் எழுந்தருளி மானம்பூ உற்சவம் இடம்பெற்றது.

தற்காலச் சூழ்நிலைக்கு அமைய ஆலயத்தில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் மானம்பூ உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது

You May Also Like

About the Author: kalaikkathir