கிளிநொச்சியில் விசேட கொரோனா விழிப்புணர்வு

கிளிநொச்சி காவல்துறையினரால் விசேட கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை 8 மணியளவில் கிளிநொச்சி நகரில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் சுத்திகரிக்கப்பட்டதுடன், பொது மக்களை விழிப்பூட்டும் பதாதைகளும் ஒட்டப்பட்டன. குறித்த நிகழ்வில் கிளிநொச்சி காவல்துறை அத்தியட்சகர், தலைமை காவல்துறை நிலைய அதிகாரி, காவல்துறை உத்தியுாகத்தர்கள், வைத்தியர்கள், சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You May Also Like

About the Author: kalaikkathir