இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த நான்கு ஊழியர்களுக்கு கொரோனா

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த நான்கு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவேவ தெரிவித்துள்ளார்.

மூன்று சாரதிகள் மற்றும் மின் இணைப்பு இயக்குநர் ஆகியே நால்வருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சொத்துக்களுக்கு கிருமி தொற்று நீக்கம் செய்யப்படுவதுடன் அவர்களுடன் நேரடியாக தொடர்புகளை பேணியவர்கள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir