இலங்கையில் மேலும் 187 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 187 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் 400 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 9,492 ஆக அதிகரித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir