அரிசி மாபியாவுக்கு எதிராக நடவடிக்கை

நாட்டில் காணப்படும் அரிசி மாபியாவுக்கு எதிராக அரசாங்கம் விரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கமத் தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கன்னோருவ பகுதியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக அரிசியை விற்பனை செய்பவர்களை கண்டறிவதற்கு சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டம் நிலைநாட்டப்படும் எனவும் கமத் தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir