வவுனியாவில் குளம் உடைப்பெடுத்ததால் வயல் நிலங்கள் பாதிப்பு !

வவுனியா ஊற்றுக்குளம் உடைப்பெடுத்துள்ள நிலையில் பல ஏக்கர் வயல்நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் பெய்த கடும் மழையின் காரணமாக நெடுங்கேணி பகுதியில் உள்ள குறித்த குளத்திற்கு நீர் வரத்து அதிகரித்த நிலையிலேயே குளம் உடைப்பெடுத்துள்ளது.

இவ் விடயம் தொடர்பில் விவசாய திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir