பாடசாலைகள் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமா?

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எட்டப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளை மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 23 ஆம் திகதி மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கல்வி அமைச்சின் பல்வேறு சுற்றுப்பேச்சுவார்த்தைகள் நேற்று இடம்பெற்றிருந்த நிலையில் இன்றைய தினம் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir