ட்ரோன் கமராக்களின் உதவியுடன் 117 பேர் கைது

ட்ரோன் கமராக்களின் உதவியுடன் தனிமைப்படுத்தல் பகுதிகளில் உத்தரவுகளை மீறி நடமாடிய 117 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் உத்தரவு நீக்கப்படும் வரை ட்ரோன் கமராக்களின் கண்காணிப்பு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று காவற்துறை ஊடகப் பேச்சாளரும், பிரதிப் காவற்துறை மா அதிபருமான அஜித் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்கத் தவறிய குற்றச்சாட்டுக்காக 46 நபர்கள் நேற்று மாத்திரம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இவ்வாறான குற்றச்சாடடுக்காக 358 நபர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir