ஜோர்டானில் வேலை இழந்த 60க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்!

ஜோர்டானில் தாம் பணியாற்றிய இரண்டு ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்ட 66 இலங்கையர்களைக் கொண்ட குழு நாட்டுக்குத் திரும்பியுள்ளனர்.

ஜோர்டானில் அசீல் மற்றும் ஹை அப்பேரல் ஆகிய இரண்டு தொழிற்சாலைகளையும் நடத்தி வந்த இந்திய முதலீட்டாளர்கள், ஊழியர்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் வழங்காமல் தொழிற்சாலைகளை மூடிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், அங்கு பணிபுரிந்த இலங்கையர்கள் குழுவொன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை தமது சம்பள மிகுதிகளையும் பிற உரிமைகளையும் பெற்றுக்கொண்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்தப் பின்னணியில், இந்த இரண்டு தொழிற்சாலைகளிலும் பணிபுரிந்த மற்றொரு இலங்கையர் குழு அடுத்த இரண்டு நாட்களில் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று ஜோர்டானில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், தூதரகத்தின் கூற்றுப்படி, 30 தொழிற்சாலை ஊழியர்கள் முன்பு ஜோர்டானில் உள்ள ஏனைய ஆடைத் தொழிற்சாலைகளில் அவர்களது சம்மதத்துடன் மீண்டும் பணியமர்த்தப்பட்டனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply