தேஷபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இடைநிறுத்தி இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டது.

நீதிபதிகள் முகமது லஃபர் மற்றும் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply